Tuesday, November 07, 2006

காத்திரு வருகிறேன்

உன்னை பார்க்கும் ஒவ்வொரு வினாடியிலும்
ஏழு ஜென்ம விதை என்னுள் புகுந்து
ஆணிவேர் விட்டு மரக்கிளைகளை பரப்பி
விழுதுகள் விட துடிக்குதடி!!!!

கருமேகங்களின் காமம் கலந்த காதலில்
சிறு இலைகள் கூட இலைத்துளி
என்னும் வார்த்தை பேசுமடி!! _நீ
என் காதல் தேவதை உன் பதிலால்
என் விதைகள் விருட்சமாகுமடி!!!

மண்ணை முட்டி முட்டி விருட்சமாக
துடிக்கும் மரவிதை போல!!
உன்னுள் கலக்க என் ஆவி
ஆயிரம் நாள்களாய் அலையுதடி!!

வளர்ந்து கிளை விட்ட பிறகும்
விழுதுகள் விடாமலிருக்கும் என்னை
காக்கைகள் கூட கேலி பேசுதடி!!

காய்த்தும் கனியாக வாய்ப்பில்லாத
இலவம் பஞ்சினை போல
என் வாலிபம் மழை நீரில்
கடலுப்பை போல கரையுதடி

உன் கரம் சேராமல் காத்திருந்த
இந்த மூன்று ஆண்டுகளில்
பின்_கரம்சேர்த்தவர்களின் பிள்ளைகள்
பள்ளிக்கு சென்று பாட்டிகள் கதைகேட்குதடி!!

பொருமை பெண்ணுக்குதான் அழகு
இந்த அழகு ஆண் மகனுக்கல்ல
ஆனி மாதம் வருவேன் உன்னை அள்ளிசெல்ல
ஆளுயுர மாலையோடு காத்திரு.

Wisdom_Vel





1 comment:

Unknown said...

appo innum rendu mathathil treat