Tuesday, February 01, 2011

இளமைகல்லரை

இளமைகல்லரை(காவியம்):நான் என் நண்பர்களின் உந்துதலால் இந்த காவியத்தை இயற்ற ஆரம்பித்திருக்கிறேன்.மற்ற விசயங்கள் என்னுடய பதிப்பிற்கு பிறகு.. அன்புடன்உங்கள் விஸ்டம் வேல்.......

Wednesday, January 19, 2011

வாடாமலர்

யார் இந்த வாடாமலர் ?
நகர்ந்தும் ,சிரித்தும் விளையாடுகிறதே !
பதில் சொல்ல ஆசைதான் ..நீதானென்று
புரியுமா அந்த வண்ணத்துப்பூச்சிக்கு

_Wisdom Vel

மருதாணி

உன் காலின் மருதாணியை பார்த்து
நீ வியக்கிறாய்,மலைக்கிறாய்,சிரிக்கிறாய் ,
நான் எப்படி உன்னிடம் சொல்ல _அது
உன்னை பார்த்து வியிக்கிறது என்று

_Wisdom Vel

Tuesday, January 18, 2011

கூந்தல்


கருமேகங்களை உன் கருவிழிகளால்
கண்டு ஏனடி ஆனந்தபடுகிறாய்?
அடடே அதோ பார் அக்கருமேகங்கள்
உன் கூந்தலை கண்டு பொறாமை கொண்டு
களைந்து ஓடுவதை ............


-Wisdom Vel

Monday, January 17, 2011

முத்தம்

பயப்படாமல்
பைய படாமல்
முத்தமிடு
உன் செவ்விதழ் தீண்டி
இந்த மரத்தமிழன் உடம்பு சிவக்கட்டும்

-Wisdom Vel